“சிறிலங்காவிற்கு சுதந்திர நாள் - தமிழர்களுக்கு கரிநாள்” யாழில் பாரிய போராட்டம்
சிறிலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்று காலை 10மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினால் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு யாழ். முனியப்பன் கோவில் வரையில் இந்த பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக தேசம், சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழரின் கரிநாள், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை மறக்கமாட்டோம், காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.