பேருந்து சேவை அதிகரிப்பு -தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்துள்ள திட்டம்
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Gemunu Wijeratne
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் போதுமானதாக இல்லை
சிபெட்கோ அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கினால் நாளை மறுதினம் 50 வீத கொள்ளளவில் பேருந்துகளை இயக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் வழங்கும் எரிபொருள் போதுமானதாக இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருளை எங்களிடம் கொடுங்கள்
“இன்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த வேண்டும். நாளை எரிபொருள் விடுவிக்கப்பட்டால், தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எரிபொருளை எங்களிடம் கொடுங்கள்” என்றார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களில் அதிகபட்சமாக 15% பேருந்துகளை இயக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
4ம் ஆண்டு நினைவஞ்சலி