முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்கான பேரணிக்கு அழைப்பு
சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்கான பேரணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்பேரணி எதிர்வரும் ஜீலை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Rrobert koch straße 5A , 58239 SCHWERTE எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது.
இப்பேரணியில் பங்குகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாக,
பங்குபற்றும் அனைவரும் கொரோனா சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பேண வேண்டும். முககவசம் வாய், மூக்கை மூடியதாக இருக்க வேண்டும்.
அமைதியான முறையில் பேரணி நகர வேண்டும். பொலிஸாரின் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றல் வேண்டும். பேரணி நடைபெறும் வீதிகளில் துப்பரவு பேணப்படுதல் அவசியம்.
பேரணியை ஒழுங்கு செய்யும் நபர்களின் நிபந்தனைகளை தயவுசெய்து நீங்களும் செவிமடுத்து, பேரணிக்கு முழு ஆதரவு தரவும்.
ஊடகங்களுக்கு உங்கள் கருத்துக்களை பகிர விரும்பினால், எழுத்துமூலம் அவ்விடத்தில் பகிரவும் - என பேரணி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.