இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம்

Indian fishermen Jaffna India Sri Lanka Fisherman
By Shadhu Shanker Feb 26, 2024 10:25 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேள் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம்(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

 கடலில் போராட்டம்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக் கொடிகளைத் தாங்கி நமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம்.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம் | Protest Against The Violations Of Indian Fishermen

இந்திய கடற்தொழிலாளர்களினால் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஆனால், இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டுவதை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்து வெளியிடுவது மனவேதனையை தருகிறது.

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல்

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள்

நாம் எமது கடலில் மீன் பிடிப்பதற்கு இந்திய அரசாங்கத்தை கேட்க வேண்டிய தேவை இல்லை அத்தோடு எமது கடலிலேயே இந்தியா கடற்தொழிலாளர்களுக்கு தாரைவாத்துக் கொடுக்கவும் முடியாது.

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்: நடுக்கடலில் பாரிய போராட்டம் | Protest Against The Violations Of Indian Fishermen

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் சிலர், இலங்கை சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு அழுத்தம் வழங்கி வருகிறது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். எமது கடல் இறைமை. எமக்கே சொந்தமான கடலை யாருக்கும் தாரை வார்க்க முடியாது.

ஆகவே, இதனை வலியுறுத்தி கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதோடு எமது போராட்டம் இலங்கை கடல் எல்லை வரை தொடரவுள்ளது”தெரிவித்தார்.

துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை

துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்