கொழும்பில் மீண்டும் வெடித்த போராட்டம்..! காவல்துறை குவிப்பு - நேரடி ரிப்போர்ட்
இரண்டாம் இணைப்பு
காலிமுகத்திடலில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வின் ஆரம்பமாக பௌத்த மத வழிபாடுகளை போராட்டக்கார்கள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டக்கார்களை கீழே வீழ்த்தும் அளவிற்கு ஏராளமான காவல்துறையினர் அவர்களை தள்ளிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் காலிமுகத்திடலில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் நோக்கத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது காலிமுகத்திடல் முன்னணி செயற்பாட்டாளர்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நினைவு கூர்தல் நிகழ்வை தடுப்பதற்காக காவல்துறையினர் காலி முகத்திடல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களை விட அதிகமான காவல்துறையினர் காலிமுகத்திடல் பகுதி மற்றும் அதிபர் செயலகத்திற்கு முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


