அலரி மாளிகைக்கு முன் சத்தியாகிரகப் போராட்டம்! குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்
srilanka
education
colombo
protest
By Vasanth
அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்கள் சிலர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியான வெட்டுப்புள்ளிகளினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நியாயம் கோரியே குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
பின்னர் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் அவ்விடத்தை அகன்று சென்றுள்ளனர்.