அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய தகவல்

Ranil Wickremesinghe Shehan Semasinghe IMF Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Apr 02, 2024 02:57 AM GMT
Report

24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணங்களை வழங்கிய பின்னர், அதுகுறித்து மீளாய்வு செய்யப்பட்டு அந்தப் பணிகள் உறுதிசெய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , “அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர், அதற்காக சுமார் 04 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்: மைத்திரி, கருணா, பிள்ளையான் மூடி மறைக்கும் உண்மைகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்: மைத்திரி, கருணா, பிள்ளையான் மூடி மறைக்கும் உண்மைகள்

அஸ்வெசும கொடுப்பனவு

அதன்படி, 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கும் பணி நிறைவு செய்யப்பட உள்ளது. ஆனால் கடந்த மே மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு கோரி விண்ணப்பித்த 34 இலட்சம் பேர் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதைக் கூற வேண்டும்.

providing-aswesuma-allowance-to-24-lakh-sl-people

மேலும், புதிதாக சமர்ப்பிக்கப்படும் 04 இலட்சம் விண்ணப்பங்கள் குறித்தும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவ்வாறு செய்கிறோம்.

24 இலட்சம் பயனாளிகளைத் தேர்வு செய்த பிறகு, அவர்கள் தொடர்பில் தொடர்ந்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறோம்.

அஸ்வெசும மூலம் வழங்கப்பட்ட பணத்தை எதற்காக செலவு செய்தார்கள்? என்றும் இது எதிர்காலத்தில் வலுவூட்டும் திட்டத்திற்கு எந்த அளவிற்கு பங்களிக்கிறது? மற்றும் இதன் ஊடாக அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

சர்வதேச நாணய நிதியம்

தொடர்ந்து 6 காலாண்டுகளாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இருந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்தோம். 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

providing-aswesuma-allowance-to-24-lakh-sl-people

அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ( Ranil Wickremesinghe) அரசாங்கமும் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட முடியுமான நிதி ஒழுக்கத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது.

அதன்போது மக்களுக்கு சிரமங்கள் இருந்தாலும், தற்போது அந்த சிரமங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது.

இன்றைய நிலவரப்படி, விலைகள் நிலையாக உள்ளன. பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு நபர்கள் சில விடயங்களை குறிப்பிட்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் நியாயமானவைகள் அல்ல என்பது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து வெளிவரும் தகவல்

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து வெளிவரும் தகவல்

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் 

பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவத்தைப் பாராட்ட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது.

providing-aswesuma-allowance-to-24-lakh-sl-people

பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்தார். எனவே, அவரது தலைமை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை.

நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது தவறான எண்ணம் என்பதைக் கூற வேண்டும்.

இப்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால் சிலர் இப்படி நம்பலாம். ஆனால் அப்படி ஒரு நிலை இதுவரை இல்லை. தற்போதைய ஸ்திரத்தன்மை மிகச் சிறந்த முகாமைத்துவம், நேரடி முடிவெடுத்தல் மற்றும் சர்வதேச நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் அடையப்பட்டுள்ளது.

ரிஷபம்,மகரம் ராசியினரே பெண்களால் ஏற்படப்போகும் கலகம்: இன்றைய ராசி பலன்

ரிஷபம்,மகரம் ராசியினரே பெண்களால் ஏற்படப்போகும் கலகம்: இன்றைய ராசி பலன்

பணவீக்கம் 

ஆனால் அது யாராலும் செய்யக் கூடிய காரியம் அல்ல. தற்போதைய திட்டத்தைத் தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டில் 2%-க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.

providing-aswesuma-allowance-to-24-lakh-sl-people

மேலும், பணமாற்று விகிதம் வலுவாக இருந்தும், பணவீக்கம் 70 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்தாலும், விலை குறைப்பின் பலன் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாததால் இது நடந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் வாரந்தோறும் மொத்த விற்பனை விலையை பொதுமக்களுக்கு அறிவிக்க வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார். அதன் பிறகு சில்லறை விலைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டாவது மறுஆய்வு இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது.

தற்போது பணிக்குழாம் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூன்றாவது தவணையைப் பெறுவதற்கு பெரிதும் ஆதரவளிக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடொன்றில் பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன் : குவியும் பாராட்டுகள்

வெளிநாடொன்றில் பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன் : குவியும் பாராட்டுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026