இரண்டு மாதக் குழந்தையைப் பலியெடுத்த பூரான்!
Death
Child
SriLanka
Puttala
Puran
By Chanakyan
பிறந்து இரண்டு மாதங்களேயான குழந்தை ஒன்று பூரான் கடித்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் புத்தளம் முந்தல் - தேவாலய சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்றிரவு தமது சகோதரர்களுடன் குழந்தை உறங்கியுள்ளது.
இன்று அதிகாலை குழந்தையிடமிருந்து எந்த அசைவுகளும் இல்லாத நிலையில், வைத்தியசாலைக்கு குழந்தையை பெற்றோர் எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பூரான் கடித்தமையே குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்று வைத்தியர்கள் தெரியவந்துள்ளர்.