ட்ரம்பின் கனவுத் திட்டத்திற்கு மிரட்டல் விடுத்த புடின்
கிரீன்லாந்தை (Greenland) கைப்பற்றும் முடிவில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் (Vladimir Putin) திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்ய நகரமான மர்மன்ஸ்கில் நடந்த சர்வதேச ஆர்க்டிக் மன்றத்தில் உரையாற்றும் போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ரஷ்யா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
புடின் திடீர் மிரட்டல்
மேலும் கருத்து தெரிவித்துள்ள விளாடிமிர் புடின், “கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க தரப்பில் முன்னெடுக்கப்படும் தீவிரமான திட்டங்களைப் பற்றி நாம் பேசுகிறோம்.
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா எவரையும் ஒருபோதும் அச்சுறுத்தியதில்லை, ஆனால் அதன் நலன்களைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும், அப்பகுதியில் அதிக இராணுவ வீரர்களை நிறுத்தும் திட்டமிருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி
மேலும்,கிரீன்லாந்தை கைப்பற்றுவது என்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறும் விசித்திரமான பேச்சு அல்ல. கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் வாய்ச்சவடால் என்று நம்புவது மிகப்பெரிய தவறாகும்”என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க (United States) துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் அவரது மனைவி உஷாவும் கிரீன்லாந்தின் வடக்கு விளிம்பில் உள்ள பிட்டுஃபிக் விண்வெளி தளத்தைப் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதியின் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
