அச்சமின்றி பயணத்தை தொடருங்கள் -மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
srilanka
people
covid 19
puttalam
By Vasanth
இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் டிப்போவுக்குரிய அனைத்து பேருந்தகளும் கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முகாமையாளர் அபேசிங்க தெரிவித்தார்.
குறித்த டிப்போவில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டநிலையில் 15 பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் 44 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைபபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொதுச்சுகாதார பரிசோதகர் சுரேஸ் வழிகாட்டலில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனவே எந்தவொரு அச்சமும் இன்றி பயணிகள் தமது பயணத்தை தொடரமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி