போருக்கு மத்தியில் விழுந்து நொருங்கிய கத்தார் உலுங்குவானூர்தி!
கத்தாரில் வழக்கமான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உலுங்குவானூர்தி ஒன்று நாட்டின் கடல் எல்லைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்குப் பிறகு, உலுங்குவானூர்தி இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தொழில்நுட்ப கோளாறு என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டள்ள நிலையில், எதுவித தாக்குதல் காரணமாக ஏற்பட்டதற்கான சான்றுகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பெப்ரவரி 28 முதல் அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், கத்தார் பலமுறை ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.
இதனால் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மையங்களில் ஒன்றான ராஸ் லாஃபான் தொழிற்நகரமும் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |