ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்
ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கட்டார் கண்டனம் செய்துள்ளதுடன், அதனை “ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை” என்றும் கூறியுள்ளது.
“பிராந்தியத்தில் தற்போது அதிகரித்து வரும் இராணுவ பதற்றத்திற்கு மத்தியில், கட்டாரின் வடக்கு வயலின் விரிவாக்கமான ஈரானின் தெற்கு பார்ஸ் வயலுடன் தொடர்புடைய வசதிகளை இஸ்ரேல் குறிவைப்பது ஒரு ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும்,”
கட்டாரின் கடும் கண்டனம்
இவ்வாறு கட்டாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி X பதிவில் தெரிவித்துள்ளார்.
The Israeli targeting of facilities linked to Iran’s South Pars field, an extension of Qatar’s North Field, is a dangerous & irresponsible step amid the current military escalation in the region.
— د. ماجد محمد الأنصاري Dr. Majed Al Ansari (@majedalansari) March 18, 2026
Targeting energy infrastructure constitutes a threat to global energy security, as…
“ஆற்றல் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பிற்கும், அத்துடன் பிராந்திய மக்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் ஓர் அச்சுறுத்தலாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“முக்கியமான வசதிகளை” குறிவைக்க வேண்டாம்
மேலும், “முக்கியமான வசதிகளை” குறிவைக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
The Iranian News Agency Tasnim reports that natural gas facilities in the port city of Asaluyeh, Bushehr province.l, were struck. The site is part of the vital South Pars energy field. pic.twitter.com/2sJOig1VZz
— Faytuks Network (@FaytuksNetwork) March 18, 2026
இதனிடையே போர் குறித்து கலந்துரையாட வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று சவூதி அரேபியாவின் தலைநகரில் சந்திக்க உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |