முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என முன்பே எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையைக் கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாத் அல்-காபி விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்க எரிசக்தி செயலாளர் மற்றும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இது குறித்துத் தான் முன்னரே வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான காரியம்
தாக்குதலுக்கு உள்ளான ராஸ் லாஃபன் (Ras Laffan) தளத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் சுமார் 10,000 பணியாளர்களைத் துரிதமாக வெளியேற்றியதன் காரணமாகவே பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடல்சார் பகுதிகளில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவது கடினமான காரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அந்தத் துணிச்சலான முடிவினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் கத்தாரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாரிய மனித உயிர்ச் சேதத்தைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |