வட மேல் மாகாண ஆளுநருக்கு ஆப்பு
leader
Raja Kollure
Communist Party of Sri Lanka
By Vanan
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொல்லுரே (Raja Kollure) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் ராஜா கொல்லுரேவை, கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் வடமேல் மாகாண அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாதம் சம்பளத்தை இடைநிறுத்தப் போவதாக ராஜா கொலுரே கூறியதுடன் அது சமூகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.