பதவி விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களப் பணிப்பாளர்!
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து செர்மிளா ராஜபக்ச (Sharmila Rajapaksa) விலகியுள்ளார்.
இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசதலைவரின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் பணியாளர்களின் தன்னிச்சையான தொழிற்சங்க நடவடிக்கைகள் விலங்கினச்சாலையில் உள்ள விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தன் கடமையைச் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், தமது பதவியை விட்டு விலகப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.