சிறையில் இருந்துகொண்டே கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஆயுள் கைதி ரவிச்சந்திரன் 5 ஆயிரம் ரூபாய் நிதியை கொரோனா நிவாரண நிதி திட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்.
அவர் சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பியிருக்கிறார்.
ஏற்கெனவே இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 20 ஆயிரம் ரூபாயும், கஜா புயல் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் அளித்திருந்தார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
இதற்கு யார் யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள், அந்த நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பதைப் பொதுவெளியில் காட்டப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் 1 கோடி ரூபாய் காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
இதேபோல நேற்று நடிகர் அஜித்குமார் 25 லட்சம் ரூபாயை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.