ரணில் பாதுகாப்பு தரப்பினர்களிற்கு பிறப்பித்துள்ள உத்தரவு!
சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல் விடுத்திருந்தனர்.
குறித்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் அதிபர் பாதுகாப்பு தரப்பினருக்கு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
புதிய அதிபர் தெரிவு
ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து 14 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இதேவேளை, புதிய அதிபரை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை தனது கடைமைகளை பொறுப்பேற்க பதில் அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய நியமித்திருந்தார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் தெரிவு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் புதிய அதிபரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
