அதிபர் ரணிலின் கடுமையான உத்தரவு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சட்ட நடவடிக்கை
தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரின் அனுமதியின்றி, அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த முடியாது.
பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,
- நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி,
- அதிபர் செயலகம்,
- அதிபர் மாளிகை,
- பிரதமர் அலுவலகம்,
- அலரி மாளிகை,
- உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம்,
- கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம்,
- சட்டமா அதிபர் திணைக்களம்,
- இராணுவத் தலைமையகம்,
- விமானப்படைத் தலைமையகம்,
- கடற்படைத் தலைமையகம்,
- பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் எதிரொலி
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் யுத்தம் நடைபற்ற காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நாட்டின் பல இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.
அது பொதுவான அனுபவமாக இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.
