'ரணில் சிங்கள பௌத்தர் அல்ல" பக்கம் சாயும் தமிழ் எம்.பி
அதிபர் வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் ரணில் ஏனையவர்களை விட தகுதியானவர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தகுதியான ஒருவரை அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பான்மைக்கு சலுகை
ரணில் குறித்து நிறையவே தவறுகளை கூறினாலும் ரணில் இருக்கும் போது வெள்ளை வான் கலாச்சாரம் இருக்காது ஆகவே இப்போது இருக்கின்றவர்களில் அவர் தகுதியானவர்.
எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்ப மாட்டார்கள் அத்தோடு ரணில் சிங்கள பௌத்தர் அல்ல அவர் சர்வதேச மனிதன்.

மேலும், அவரது யோசனைகள் வேறு விதமாக இருப்பதோடு இந்நாட்டில் வாக்கு வேண்டுமெனில் சிங்கள பௌத்தராக இருக்க வேண்டும் அதற்கு அவர் செய்ய வேண்டியதொன்று நமக்கு தரவேண்டியவைகளை அறுத்துவிட வேண்டும்.
சிறுபான்மைகளை விட பெரும்பான்மைக்கு சலுகைகளை வழங்குவதோடு அவரது கருத்து புத்திசாதூரியமானவை பாராட்டக்கூடிய விடயமாகும்.
அதிகாரம் வேண்டும்
ரணில் விக்ரமசிங்க தலைவராக இருக்கும்போது தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது, ஆனால் நாடு முன்னேறும்.
ஜே.வி.பி உடன் கலந்துரையாடி வேலையில்லை ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கினை இணைத்து 1987 இல் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானதுடன் அதனை இல்லாதொழிக்க நீதிமன்றம் சென்றது ஜே.வி.பி. வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரம் எமக்கு வேண்டும்.

அத்தோடு அந்த உடன்பாட்டில் ஜே.வி.பி இல்லை மேலும் எந்தவொரு தெற்கு அரசியல்வாதியும் வடக்கு கிழக்கிற்கான அதிகாரத்தினையோ அல்லது அதற்கான நீதியையோ தர விரும்பமாட்டார்கள்.
எனது வாக்கு ரணிலுக்கு தான் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை இந்நிலையில் நான் வேட்பாளராக நின்றால் அவருக்கு வழங்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 21 மணி நேரம் முன்