ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம்

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Ranil Wickremesinghe Sri Lanka Anti-Govt Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan Aug 31, 2022 03:07 PM GMT
Report

இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2022, ஓகஸ்ட் 18, அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூன்று மாணவ தலைவர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இது விசாரணையின்றி அவர்களை ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

உரிமைகளை நசுக்கும் ரணில்

ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம் | Ranil Terrorism Laws Sl Protesters

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின், இராஜினாமாவைத் தொடர்ந்து ரணில் ஜூலை 21 அன்று அதிபராக பதவியேற்றதிலிருந்து, ரணில் கருத்து சுதந்திரம், மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட உரிமைகளை நசுக்கி வருகிறார்.

அவரது நிர்வாகம் ஒரு மாத அவசரகால நிலையை விதித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தியது. அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவதாகவும், உரிமைகளை மதிக்கும் சட்டத்தை அதற்குப் பதிலாக கொண்டு வருவதாகவும் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளன.

இந்த நிலையில் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்களை, முடக்குவதற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தியிருப்பது, அவரது நிர்வாகத்தில் உரிமைகளுக்கு முன்னுரிமை கிடைக்காது என்ற ஒரு சிலிர்ப்பான செய்தியை இலங்கையர்களுக்கு கூறுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

உறுதிமொழி கொடுத்த ரணில்

ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம் | Ranil Terrorism Laws Sl Protesters

பயங்கரவாத தடுப்புச் சட்டம், முதன்முதலில் 1979 இல் ஒரு "தற்காலிக" நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், அது, தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதையை செயற்படுத்திய சர்வதேச சட்ட தரங்களுக்கு முரணான பல விதிகளை கொண்டுள்ளது.

அரசாங்க எதிர்ப்பாளர்களையும் சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களையும் குறிவைக்க இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

2015 இல் பிரதமராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒருமித்த தீர்மானத்தை ஆதரித்த போது, ​​சட்டத்தை நீக்குவதாக ரணில் உறுதியளித்தார்.

2017 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தில் இலங்கை மீண்டும் சேர்க்கப்பட்டபோது, ​​சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு இணங்குவதாக அவர் உறுதிமொழி வழங்கினார்.

கடந்த ஜூலை மாதம், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடைமுறையை இலங்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம்

ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம் | Ranil Terrorism Laws Sl Protesters

முன்னதாக, மார்ச் 22 அன்று, முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான அலி சப்ரி, "பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றங்கள் தவிர மற்றைய குற்றங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு நடைமுறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க, மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும், ஓகஸ்ட் 18ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்படுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்று பேரையும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கும் தடுப்பு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.


இந்தநிலையில் தங்காலை சிறைச்சாலையில், அவர்கள் மோசமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நியமங்களை மீறி, பாதுகாவலர்கள் இல்லாமல் சட்டத்தரணிகளுடன் அவர்கள் பேச முடியவில்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூக அமைப்புக்கள் இந்த தடுப்புக் காவலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதில் சந்தேகப்படும் எவரும் பயங்கரவாதியாக தவறாகக் கருதப்படக்கூடாது” என்று கூறியுள்ளது.

இலங்கையில் ஜனநாயக சிதைவு

ரணிலுக்கு வந்த சர்வதேச இறுக்கம் | Ranil Terrorism Laws Sl Protesters

இலங்கையின் சில சர்வதேச பங்காளிகள், அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முற்படும் ஆதரவுடன், கருத்து வேறுபாடுகளை அடக்குவதையும் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டையும் நிறுத்துமாறு ரணிலிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் டுவிட்டரில், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், GSP+ இன் கீழ் இலங்கையின் கடப்பாடுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.


இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பல பில்லியன் டொலர் பெறுமதியான பிணையெடுப்பைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்தோடு, நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அமைதியான கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்கிறோம் என்பதை ரணில் அரசாங்கம், சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
மரண அறிவித்தல்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023