ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம்: கொழும்பு வைத்தியசாலை எச்சரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரணிலை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, உடல் நீர்ச்சத்துக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மாரடைப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்ச்சத்து குறைபாடு
நீதிமன்ற அறையில் பல மணி நேரம் காத்திருக்கும் போது மின்சாரம் தடைபட்டதாலும், தண்ணீர் குடிக்காததாலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவருக்கும் இவ்வாறு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ரணில், தற்போது சிறப்பு வைத்தியர் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இரண்டு முதல் மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று வைத்தியர்கள் நம்புவதாக பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 5 மணி நேரம் முன்
