அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Anti-Govt Protest
By Vanan Sep 11, 2022 12:12 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ராஜபக்சர்களின் அல்லது அரசாங்கத்தின் கடனை செலுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்பாடு இல்லை.

கோட்டாபயவின் மீள் வருகை

அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு | Ranil Under Slpp Imf Advice Sri Lanka

இந்நாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கடனை அடைத்து அவர்களின் வாழ்வை சிறப்புறச் செய்யும் தேவைப்பாடு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கிய காக்கை கூட சுதந்திரமாக அமெரிக்கா செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

அவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட லஹிரு மற்றும் தமிதா போன்றோரை அரசாங்கம் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அன்று இந்நாட்டில் அடக்குமுறையை ஆரம்பித்தவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்காக அலரி மாளிகையில் திரண்ட குண்டர்கள் தான். அவர்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

கடமைகளை மறந்த ரணில்

அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு | Ranil Under Slpp Imf Advice Sri Lanka

சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கையில் ஒரு புதிய மக்கள் அபிப்பிராயம் உருவாக வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மொட்டுவின் 134 பேரின் அபிப்பிராயத்திற்கு அடிபணிந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து பொதுப் போராட்டத்தின் மூலம் முன்னாள் அதிபரையும் பிரதமரையும் விரட்டியடித்தனர். ஆனால் அதற்கு பதிலாக மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, தற்போதைய அதிபர் மொட்டுக்கு தனது நன்றிக் கடனை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய தமது கடமைகளை மறந்துள்ளார்” என்றார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014