வெறும் காகித புலிகள்...! அமெரிக்காவைச் சீண்டும் ஈரான் அதி உயர் தலைவர்
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள். அவர்களால், அவர்களை கூட காப்பாற்றி கொள்ள முடியவில்லை என ஈரான் அதியுயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உயர் தலைவர் எக்ஸ் (X) தள பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தளங்களின் தற்காப்புத் திறனைக் கேலி செய்ததுடன் இந்த மோதலின் போது அமெரிக்காவை ஆதரித்த இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டு உள்ளார்.
எங்களுடைய அடையாளம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் நடத்திய தாக்குதலின் போது, பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் இலக்காக கொள்ளப்பட்டன.

அவற்றின் மீது ரொக்கெட்டுகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதேபோன்று மற்றொரு பதிவில், பாரசீக வளைகுடா வெறும் கடல் நீர் என்றில்லாமல், எங்களுடைய அடையாளம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அது உள்ளது.
நாடுகளுக்கு இடையே இணைப்பு புள்ளியாக இருப்பதுடன், உலகளாவிய பொருளாதாரத்திற்கான முக்கிய வழியாகவும் அது உள்ளது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |