சாணக்கியனின் உரைக்கு எதிராக பொங்கி எழுந்த ஆளும் தரப்பு

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka Harini Amarasuriya
By Sathangani Apr 10, 2025 05:08 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதாக ஆளும் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  

அத்துடன் உரை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற அமர்வின்போது இரா.சாணக்கியன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல், புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

சபைக்குப் பொருத்தமற்ற மொழி நடை

இதற்குப் பதிலளித்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய, "சக நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் மற்றும் மொழி நடை சபைக்குப் பொருத்தமற்றவையாக உள்ளன.

சாணக்கியனின் உரைக்கு எதிராக பொங்கி எழுந்த ஆளும் தரப்பு | Rasamanickam Shanakiyan Speech In Parlimant

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காதீர்கள் என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.

கௌரவம் மலினப்படுத்தப்படும்

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, "பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

சாணக்கியனின் உரைக்கு எதிராக பொங்கி எழுந்த ஆளும் தரப்பு | Rasamanickam Shanakiyan Speech In Parlimant 

இதனைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால் நாடாளுமன்றத்தின் கௌரவம் மலினப்படுத்தப்படும்.

ஆகவே, இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்துங்கள் என சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய உணர்வை இறுக பற்றி நிற்கும் மட்டக்களப்பு மக்கள் : சிறிநாத் எம்.பி பெருமிதம்

தமிழ் தேசிய உணர்வை இறுக பற்றி நிற்கும் மட்டக்களப்பு மக்கள் : சிறிநாத் எம்.பி பெருமிதம்

பிள்ளையானின் கைதின் பின்னணியில் கருணா! அம்பலமாகும் இரகசியம்

பிள்ளையானின் கைதின் பின்னணியில் கருணா! அம்பலமாகும் இரகசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025