நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Sri Lankan political crisis
Motion of no confidence
By Kanna
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக 3 மொழிகளிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், ஐந்து வேலை நாட்கள் முடியும் வரை விவாதம் நடத்தக் கூடாது எனவும், அதற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதைப் படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி