மேற்கு கடற்கரையில் கரையொதுங்கும் ஆமைகள் - காரணத்தை வெளியிட்ட வனஜீவராசிகள் திணைக்களம்
இலங்கையில் மேற்கு கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கு கடலில் ஏற்பட்ட வெடிப்பே காரணம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்த ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால், கடலுக்கடியில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கு கடற்கரையில் 25 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதனை தவிர, 3 ஆமைகளின் வெளிப்புற ஓடு கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.