யாழில் முடிவுறுத்தப்பட்டது நல்லிணக்க பயணம்
Protest
Jaffna
By Vasanth
யாழ். சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திர முனையிலிருந்து யாழ். பருத்தித்துறை முனை வரையிலான நல்லிணக்க பயணம் இன்று யாழ்ப்பாணத்தில் முடிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நடைபவனி இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்து, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புரையும் இடம்பெற்றது.
குறித்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.