மனித பாவனைக்கு தகுதியற்ற 40,000 Kg உருளைக்கிழங்குகள் மீட்பு
sri lanka
people
dambulla
poteto
By Shalini
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை அண்டிய களஞ்சியசாலையில் இருந்து மனித பாவனைக்கு தகுதியற்ற 40 ஆயிரம் கிலோ கிராம் எடையுள்ள உருளைக்கிழங்குகள் அடங்கிய கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக, அவை முளைத்த நிலையில் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முளை நிலையில் இருந்த உருளைக்கிழங்குகளை சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பத் தயாராகும்போது அதிகாரிகளினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி