நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!
police
women
recovery
mahavali
By Kiruththikan
மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தலாத்துஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியிலே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலாத்துஓயா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 40 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், அவர் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த சட்டை மற்றும் வெள்ளை பாவாடை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி