ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இந்த நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
இவ்வாறு நியமிக்கப்படவுள்ள 23,344 பட்டதாரி ஆசிரியர்களில் சுமார் 15,000 வெற்றிடங்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் சுமார் 8,000 வெற்றிடங்கள் திறந்த அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆட்சேர்ப்பிற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |