வளி மண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
WEATHER
RED ALERT
By Kanna
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு உருவாகியுள்ளதையடுத்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மார்ச் 20-ம் திகதி காலை 08.30 மணியளவில் மையம் கொண்டுள்ளது.
இது சிலநேரங்களில் வடக்கு நோக்கி நகர்ந்து மார்ச் 21 ஆம் திகதி காலை 05.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதே நாளில் சூறாவளி புயலாகவும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடற்தொழிலாளர்களையும் கடற்படையினரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி