சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைய முயன்றபோது சிக்கினார்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட செக் குடியுரிமை பெற்ற ஒருவர், இலங்கைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, காலி துறைமுகத்தில் கடமையாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குழுவினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான சின்டலெக் ஜோசப் மற்றொரு செக் நாட்டுப் பெண்ணுடன் இந்தோனேசியாவின் சதாம் துறைமுகத்தில் இருந்து இலகுரக படகில் காலியை வந்தடைந்தார்.
காலி துறைமுகத்தை வந்தடைந்த அவர்கள், விசா பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தமது கடவுச்சீட்டை கையளித்தனர், அங்கு கடமையிலிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், செக் குடியுரிமை பெற்ற நபரின் கடவுச்சீட்டு இன்டர்போலின் சிவப்பு பிடியாணை பட்டியலில் உள்ளடங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இவரைப் பற்றிய அனைத்து சட்ட விவரங்களையும் கண்டறிந்து, காலி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக கடற்படை வீரர்கள் உட்பட ஏனைய பொறுப்பு வாய்ந்த பிரிவுகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செக் குடியரசை சேர்ந்த இவரை கைது செய்து மீண்டும் செக் குடியரசிற்கு நாடு கடத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படாததால் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.