ரணிலுக்காக இறைவனை பிரார்த்திக்குமாறு கோரிக்கை: சாகல உருக்கம்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும் அவரை ஆசீர்வதிக்கவும் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்காக போதிபூஜை நடத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்ற எல்லா தலைவர்களும் தயங்கியபோது, முற்றிலும் சரிந்த பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தார் எனவே, அவருக்கு நன்றி தெரிவிக்க இதுவே சரியான நேரம் என்றும் சாகல கூறியுள்ளார்.
மத நடவடிக்கை
இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக, அவருக்கு நன்றி தெரிவிக்க இதுவே சரியான நேரம் என்பதை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியின் போது ரணில் நாட்டைப் பொறுப்பேற்றதால்தான் தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்ய முடிந்தது என்றும், இது இன்று மக்கள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளித்தது என்றும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து குடிமக்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக நின்று அவரை ஆசீர்வதிக்க மத நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

