பொடுகு தொல்லையா... இதை செய்தால் ஒரே குளியலில் தீர்வு!
தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்கள் உதிர்தல் ஆகும்.
சருமத்தின் செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான், ஆனால் சில மக்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இந்த உதிர்தல் ஏற்படும்.
இதன் காரணமாக சிவத்தல் மற்றும் எரிச்சல் சேர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படடுவதுடன் தலையில் அதிகமாக வெள்ளைச் செதில்களாக படிந்து காணப்படும்.
பொதுவாகவே, பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது. ஏறக்குறைய மக்கள் தொகையில் பாதியளவிற்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்
வானிலை மாற்றம்
ஹார்மோன் மாற்றங்கள்
முடியை சுத்தம் செய்யாமல் இருப்பது
வறட்சியான சருமத்தினால் வரும் அழுக்கு தலையுடன் இருப்பது
ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை
நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்
மருதாணி
மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம் இதை தடுப்பதாக இருக்கும் ஒரே ஒரு பிரதான மருந்தாக மருதாணியை கூறலாம்.
மருதாணியை வைத்து குறித்த மருந்தை தயாரிக்கும் விதம் பின்வருமாறு,
- மருதாணி தூள் - 4 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு
- தயிர் - தேவைக்கேற்ப
செய்முறை
1. மருதாணி பொடியை எலுமிச்சை சாறுடன் கலந்து தயிரை சேர்க்கவும்.
2. அதை கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுக்கவும்.
3. பின் முடியின் வேர் முதல் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் வரை வைத்து கழுவவும்.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |
