இலங்கையில் மீண்டும் அதிகரித்தது கொரோனா! சுகாதார ஆய்வாளர்களின் திடீர் தீர்மானம்
கொரோனா நோய்த் தொற்றுகள் திடீரென அதிகரித்திருப்பதால் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்துவதை ஆரம்பிக்க முடிவு செய்யதுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணத் தடைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) கூறினார்.
இதேவேளை, பொது போக்குவரத்து சேவைகளின் செயல்பாடுகளில் திருப்தி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் மீறுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிய பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.