அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : சபையில் கேள்வியெழுப்பிய நாமல்
நாட்டின் வாழ்க்கைச் செலவு 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஈடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, "தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை சம்பளம் உயர்த்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. அது தற்போது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு உயர்வு
எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விலை உயர்வால் வாழ்க்கைச் செலவு 300 வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஈடாக சம்பளம் உயரும் வரை மக்கள் காத்திருக்கிறார்கள்.

அரச துறையில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும்.
பொய்கள் மற்றும் ஊழல்கள் மூலம் மக்களை ஏமாற்றாமல், அதிகரித்துள்ள சுமைக்கு ஏற்ப மக்களுக்குத் தீர்வினை வழங்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |