இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போதே கயந்த கருணாதிலக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் - சிங்கள புத்தாண்டு வரவுள்ளது. பண்டிகைக்காலத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலை அதிரித்துள்ளது.
விலைகள் அதிரிகரிப்பு
இதன் காரணமாக நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். அரிசி, சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரிகரித்துள்ளன.

ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவசியமாகும். நாட்டு மக்களின் பக்கம் சிந்தித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |