பாதிப்படையப்போகும் ரஷ்ய இலங்கை உறவு! எச்சரித்த தினேஷ் குணவர்தன
United Russia
Government Of Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kiruththikan
ரஷ்ய ‘ஏரோப்ளோட்’ விமானம்
இலங்ககையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் ரஷ்ய ‘ஏரோப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ‘ஏரோ ப்ளோட்’ விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கொழும்புக்கான விமான சேவைகளை அந்நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
எனவே இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரகபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.