மனைவியை மீட்டுத் தாருங்கள் - கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கணவர்
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் அங்கு பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவிக்கும் தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கொன்சீயூலர் அலுவலகத்தில் முறையிட்டள்ளார்.
அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி என்ற முகவரியைச் சேர்ந்த வடிவேல் லிங்கேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு தனது மனைவியை மீட்டுத் தருமாறு தெரிவித்து முறைப்பாடு அளித்துள்ளர்.
பொருளாதார நெருக்கடி
திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முகவர் மூலம் மனைவி சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துயரங்கள்
இவ்வாறு சென்ற அவருக்கு துன்புறுத்தல்கள் ஒழுங்கான உணவு வழங்கப்படாமை போன்ற பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருவதுடன், குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுவதாக மனைவி தெரிவித்ததாக கணவர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
