ரிசாட்டின் கைது - களங்கத்தில் உலக முஸ்லிம் சமூகம்
arrest
rizad
By Vanan
மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் கைது எமது நாட்டில் மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கந்தளாய் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.மதார், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்