யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன் விபத்து – இருவர் காயம்
Sri Lanka Police
Jaffna
Accident
By Thulsi
யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (30.12.2025) மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், மானிப்பாயில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்துக்கு உள்ளானது.
வைத்தியசாலையில் அனுமதி
இதில் முச்சக்கர வண்டியை செலுத்திய 55 வயதுடைய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்