தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்து - இருவர் பலி!
கம்பஹா - கேகாலை வீதியில் உரபொல - ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,
உரபொலவிலிருந்து ருவன்வெல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி எதிரே வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சப்புகஸ்தென்ன, நிக்கஹட்டிகந்த பகுதியைச் சேர்ந்த, 30 வயதுடைய(விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் ஓட்டுநர்) ஒக்கடவத்த ஹெவகே திலின மதுஷன் அபேயரத்ன மற்றும் 58 வயதுடைய அவரின் தாயார் நப்பயலகே சுமித்ரா ரத்னாவதி எனவும் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |