கால்பந்து வீரர்களில் வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
பிரபல கால்பந்து வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ(Cristiano Ronaldo) (40) ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி புரோ லீக் அணியான அல் நாசருடன் ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டபோது இந்த பெருமையை பெற்றுள்ளார். அதன் மதிப்பு 400 மில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.
அதிகரித்த சொத்து மதிப்பு
மேலும் அர்மானி மற்றும் நைக் உடனான பிராண்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
போர்த்துகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
