ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி

Maithripala Sirisena Supreme Court of Sri Lanka
By Sumithiran Mar 11, 2025 09:49 AM GMT
Report

புதிய இணைப்பு

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி, ஏப்ரல் 29 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு நீதிபதிகள் குழு அறிவித்தது.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : உச்சநீதிமன்றிலிருந்து மைத்திரிக்கு பறந்த நோட்டீஸ்

ரோயல் பார்க் கொலை(royal park murder) வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்கான காரணத்தைக் விளக்குமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(maithripala sirisena) உச்ச நீதிமன்றம் இன்று(11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.1 மில்லியன் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி செலுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ஏன் தண்டனை வழங்கக்கூடாது..! 

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் எஸ். துரைராஜா, யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி | Royal Park Victims Sc Notice To Maithripala

 கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ​​அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாகவில்லை, மேலும் அவர் சார்பாக ஒரு வழக்கறிஞர் கூட முன்னிலையாகவில்லை

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது

  வெளிநாட்டு பெண் படுகொலை

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன மற்றும் சட்டத்தரணி ருக்‌ஷான் சேனாதீர ஆகியோர் முன்னிலையாகினர். இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்திற்காக சாலிய பீரிஸ் முன்னிலையானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி | Royal Park Victims Sc Notice To Maithripala

 கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய காலத்தில் நடந்த சம்பவம்: கடும் எதிர்ப்பு வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

கோட்டாபய காலத்தில் நடந்த சம்பவம்: கடும் எதிர்ப்பு வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023