ரணிலின் பிரித்தானிய பயணத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதி : உறுதிப்படுத்திய காவல்துறை

Sri Lanka Police Ranil Wickremesinghe United Kingdom Money
By Sathangani Aug 23, 2025 11:45 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைதுக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய பிரித்தானிய விஜயத்துக்கான நிதி, ஜனாதிபதி செயலகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காலிங்க ஜயசிங்க (Kalinga Jayasinghe) தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஊடகப் பிரிவில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், ரணில் விக்ரமசிங்க அவரது பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட சுமார் 10 பேருடன் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ரணிலின் பிணை மறுப்பு : அதிருப்தி வெளியிட்ட சுமந்திரன்

ரணிலின் பிணை மறுப்பு : அதிருப்தி வெளியிட்ட சுமந்திரன்

ஜனாதிபதி செயலகதத்தின் நிதி

இதுவொரு உத்தியோகபூர்வ விஜயம் அல்லவென, ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் என்பவற்றுக்கு இடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் ஊடாக நிரூபணமாகியுள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதி : உறுதிப்படுத்திய காவல்துறை | Rs 1Cr Allocated From Gov Fund For Ranil S Uk Trip

ரணில் விக்ரமசிங்கவின் இருநாள் பிரித்தானிய விஜயத்துக்கான செலவு மதிப்பீட்டுக்கமைய, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் 44 ஆயிரத்து 445 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (ஒரு கோடியே 62 இலட்சத்து 70 ஆயிரத்து 572 ரூபா 83 சதம்) இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த நிதியானது, ஜனாதிபதியின் செயலகத்துக்கான ஒதுக்கத்திலிருந்து, வெளிவிவகார அமைச்சுக்கு வரவு வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிதியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது பாரியார் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரின் செலவுகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை

அவர்களது பயணச்சீட்டு செலவுகளை தவிர்ந்த தங்குமிடம் உள்ளிட்ட ஏனைய அனைத்து செலவுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதி : உறுதிப்படுத்திய காவல்துறை | Rs 1Cr Allocated From Gov Fund For Ranil S Uk Trip

இதனைவிட, ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானியாவுக்கு பயணித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படையின் வைத்தியரின் செலவுகளுக்காக மேலதிகமாக 32 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுதொடர்பில், காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய, கடந்த வருட பிற்பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயம் உத்தியோகபூர்வமற்ற விடயம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னார் காற்றலை விடயத்தில் அநுரவின் இரட்டை முகம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மன்னார் காற்றலை விடயத்தில் அநுரவின் இரட்டை முகம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரச மரியாதைகள் இடம்பெறவில்லை

முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்துக்காக எந்தவித இராஜதந்திர அழைப்புகள் விடுக்கப்படவில்லை. அத்துடன், இராஜதந்திர விஜயத்தின்போது வழங்கப்படும் அரச மரியாதைகளும் இந்த விஜயத்தின்போது அங்கு உத்தியோகபூர்வ சந்திப்புகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.

ரணிலின் பிரித்தானிய பயணத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதி : உறுதிப்படுத்திய காவல்துறை | Rs 1Cr Allocated From Gov Fund For Ranil S Uk Trip

அதன்படி, இது ஒரு தனிப்பட்ட விஜயம் என விசாரணைகளில் தெரியவந்திருந்த நிலையில், அதற்காக அரசின் நிதி பயன்படுத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டது.

அதற்கமையவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1993 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து சட்டத்தின் 5 ஆவது பிரிவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்“ என காவல்துறை சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரணில்..! வெளியாகியுள்ள புகைப்படம்

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரணில்..! வெளியாகியுள்ள புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026