மன்னார் காற்றலை விடயத்தில் அநுரவின் இரட்டை முகம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மன்னார் (Mannar) காற்றலை விடயத்தில் இரட்டை நிலைப்பாடுடன் காணப்படுவதாக மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் முன்னெடுக்கப்படும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சாரம் போன்ற திட்டங்களில் அநுர முரண்பட்ட நிலையில் மாறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
இந்த இரட்டை நிலைப்பாடு போராட்டத் தரப்பான மன்னார் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே எதிர்காலத்தில் கொடுக்கும்.
சாதக பாதகங்கள்
மன்னார் மாவட்ட போராட்டத் தரப்பின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர சந்தித்த போது அநுர மேற்கொண்ட உரையாடல் சந்தித்தவர்களுக்கு சந்தேகத்தையும் இரட்டை நிலைப்பாட்டையும் உணர வைத்தது.
அத்தோடு கனியமணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சார திட்டங்களை தடுக்க ஒரு மாத அவகாசம் கேட்டார் அநுர.
அத்தோடு திட்டங்கள் தொடர்பாக அதன் சாதக பாதகங்களை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாகவும் குழுவின் அறிக்கையின் பின்னர் முடிவுகளை எடுப்பதாகவும் அநுர கூறியுள்ளார்.
போராட்டக் குழு
போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்த சில தினங்களில் மன்னார் மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்த போது பிரச்சினைக்குரிய திட்டங்களை உடனடியாக நிறுத்துவதாக ஆயரிடம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
ஒரு மாத அவகாசம் கேட்ட ஜனாதிபதி அநுர ஒரு சில நாட்களில் உடனடியாக நிறுத்துவதாக கூறியமை முரன்பட்ட இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
காற்றலை மின்சாரத்தை அமைப்பதற்கான உபகரணங்கள் அடங்கிய நூற்றுக்கு அதிகமான பார ஊர்திகள் மன்னார் மாவட்டத்துக்குள் வந்துள்ள நிலையில் ஐனாதிபதியின் முன் பின் முரனான உரையாடல் அவரது இரட்டை நிலைப்பாட்டையே உறுதி செய்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்