நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர்

Ranil Wickremesinghe Law and Order Ramalingam Chandrasekar NPP Government
By Sathangani Aug 23, 2025 10:11 AM GMT
Report

மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தவர்கள் மற்றும் நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள் என எல்லோரும் அச்சமடைகின்ற ஒரு கைதாகவே ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது அமைந்துள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)  தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (23) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம செய்தனர் 

எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்கு கூடுதலான சேவைகளை செய்து வருகின்றது. ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இன்னும் பலர் உள்ளே செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இந்த நாடு வங்குரோத்து அடைந்த நாடு என அறிவிக்கப்பட்டது. வங்குரோத்து என அறிவிக்கப்பட்ட நாட்டில், தங்களுடைய அப்பாவினுடைய சொத்து என நினைத்து, மக்களுடைய பணமான 166 இலட்சத்தை வீணடித்துள்ளனர்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர் | Ranil Arrested Justice Has Been Sl Restored

சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அதனுடைய விளைவாகவே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதுவரை இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் உயரத்தில் இருப்பவர்கள், மேட்டுக்குடிகள், அவர்களிடையே நெருங்க முடியாது எனக் கூறப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க என்பவர் பெரிய நரியர், பெரிய தந்திரக்காரர், பெரிய மூளைசாலி, பலசாலி என்பது அவருக்கு பின்னால் உலகமே இருக்கின்றது எனக் கூறி, ரணில் விக்ரமசிங்க மீது கை வைக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளரும் சிக்கினார்.!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளரும் சிக்கினார்.!

 நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

ஆனால், நாங்கள் அவர் மீது கை வைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதுநாள் வரை நாட்டின் சட்டத்தை இந்த நாட்டிலுள்ள மேட்டுக்குடிகள் தங்களுடைய பைகளுக்குள் வைத்திருந்தனர்.

ஆனால், இன்று நீதித்துறை சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான அனுமதி மற்றும் சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர் | Ranil Arrested Justice Has Been Sl Restored

அந்த சுயாதீன நீதிமன்றம், சுயாதீனமாக விசாரணை செய்து, மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தது யாராக இருந்தாலும், அவர்களுடைய தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த நடவடிக்கையின் ஒன்றாகவே, முழு நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள், நாட்டில் கொள்ளையடித்தவர்கள் என எல்லோரும் நடுங்குகின்ற அல்லது அச்சமடைகின்ற ஒரு கைதாகவே இந்த ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்துள்ளது.” என தெரிவித்தார்.

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026