நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர்

Ranil Wickremesinghe Law and Order Ramalingam Chandrasekar NPP Government
By Sathangani Aug 23, 2025 10:11 AM GMT
Report

மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தவர்கள் மற்றும் நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள் என எல்லோரும் அச்சமடைகின்ற ஒரு கைதாகவே ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது அமைந்துள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)  தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (23) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம செய்தனர் 

எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்கு கூடுதலான சேவைகளை செய்து வருகின்றது. ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இன்னும் பலர் உள்ளே செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இந்த நாடு வங்குரோத்து அடைந்த நாடு என அறிவிக்கப்பட்டது. வங்குரோத்து என அறிவிக்கப்பட்ட நாட்டில், தங்களுடைய அப்பாவினுடைய சொத்து என நினைத்து, மக்களுடைய பணமான 166 இலட்சத்தை வீணடித்துள்ளனர்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர் | Ranil Arrested Justice Has Been Sl Restored

சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அதனுடைய விளைவாகவே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதுவரை இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் உயரத்தில் இருப்பவர்கள், மேட்டுக்குடிகள், அவர்களிடையே நெருங்க முடியாது எனக் கூறப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க என்பவர் பெரிய நரியர், பெரிய தந்திரக்காரர், பெரிய மூளைசாலி, பலசாலி என்பது அவருக்கு பின்னால் உலகமே இருக்கின்றது எனக் கூறி, ரணில் விக்ரமசிங்க மீது கை வைக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளரும் சிக்கினார்.!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளரும் சிக்கினார்.!

 நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

ஆனால், நாங்கள் அவர் மீது கை வைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதுநாள் வரை நாட்டின் சட்டத்தை இந்த நாட்டிலுள்ள மேட்டுக்குடிகள் தங்களுடைய பைகளுக்குள் வைத்திருந்தனர்.

ஆனால், இன்று நீதித்துறை சுயாதீனமாக இயங்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான அனுமதி மற்றும் சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அச்சத்திற்குள்ளாக்கிய ரணிலின் கைது : கடற்றொழில் அமைச்சர் | Ranil Arrested Justice Has Been Sl Restored

அந்த சுயாதீன நீதிமன்றம், சுயாதீனமாக விசாரணை செய்து, மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தது யாராக இருந்தாலும், அவர்களுடைய தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த நடவடிக்கையின் ஒன்றாகவே, முழு நாட்டில் இருக்கின்ற பழைய அரசியல்வாதிகள், நாட்டில் கொள்ளையடித்தவர்கள் என எல்லோரும் நடுங்குகின்ற அல்லது அச்சமடைகின்ற ஒரு கைதாகவே இந்த ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்துள்ளது.” என தெரிவித்தார்.

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்