ரஷ்யாவின் துல்லிய ஏவுகணை தாக்குதல் - உக்ரைனில் 100 கூலிப்படையினர் பலி
russia
ukraine
missle attack
By Sumithiran
ரஷ்யா நடத்திய துல்லிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 100 கூலிப்படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனில் ஜைட்டோமைர் பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. அங்கு வெளிநாட்டு கூலிப்படையினர் தங்கி இருந்ததாக தெரிகிறது.
அந்த மையத்தின் மீது துல்லியமாக வழிகாட்டும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதலில் கூலிப்படையினர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நேற்று உறுதி செய்தது.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனிய ஆயுதப்படைகளின் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான பயிற்சி மையத்தில் உயர் துல்லியமான ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைனுக்கு வந்திருந்த வெளிநாட்டு கூலிப்படையினர் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்” என கூறப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி