உக்ரைனில் பேரிழப்பை சந்தித்துள்ள ரஷ்யா
உக்ரைனில் தொடரும் போரால் ரஷ்யா பேரிழப்பை சந்தித்து வருகிறது.
படைவீரர்கள் மட்டுமன்றி ஆயுத தளபாடங்கள்,வானூர்திகள் ,தாங்கிகள் என பெருமளவில் இழப்பை சந்தித்து வருகிறது.
கடந்த ஒரு நாளில் மட்டும் நடந்த மோதலில் 390 ரஷ்ய படையினர் கொன்று குவிக்கப்பட்டதோடு ஹெலி கொப்டர் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் 176,630 ரஷ்ய படையினர்,7,013 ஆயுத தளபாடங்கள்,3,631 தாங்கிகள் மற்றும்292 ஹெலிகொப்டர்களை ரஷ்யா இழந்துள்ளது.
இதன்படி 24 பெப்ரவரி 2022 மற்றும் ஏப்ரல் 6, 2023 க்கு இடையில் ரஷ்ய துருப்புக்களின் இழப்புகள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது [அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன.]
சுமார் 176,630 (+390) இராணுவ வீரர்கள் 3,631 (+2) தாங்கிகள் 7,013 (+8) கவச போர் வாகனங்கள் 2,714 (+7) ஆட்லறிகள் 532 (+0) பல்குழல் ஏவுகணை செலுத்திகள் 281 (+1) வான் பாதுகாப்பு அமைப்புகள் 306 (+0) நிலையான இறக்கை விமானம் 292 (+1) ஹெலிகொப்டர்கள் 2,287 (+4) செயல்பாட்டு-தந்திர யுஏவிகள் 911 (+0) கப்பல் ஏவுகணைகள் 18 (+0) கப்பல்கள்/படகுகள் 5,574 (+1) வாகனங்கள் மற்றும் டாங்கர்கள் 302(+3) சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள்
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்