ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த கோரிக்கை
ஈரான் மீதான போர் உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் போர் தொடங்கக்கூடாது என ஈரானுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய மோதலுக்கு "இராணுவத் தீர்வு" எதுவும் இல்லை என்றும், பகைமை மீண்டும் தொடங்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பின் போது லாவ்ரோவ் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் இதை வலியுறுத்தினார்.
தளராத தயார் நிலை
மேலும் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதில் உதவுவதற்கு ரஷ்யாவின் "தளராத தயார்நிலை" குறித்தும் அவர்களுக்கு உறுதியளித்தார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் விவரங்களையும் அராக்சி லாவ்ரோவிடம் வழங்கினார்.
ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய கூட்டாளிகள், மேலும் "விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கான ஈரான்-ரஷ்ய ஒப்பந்தம்" 2025-ல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |